ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மரியாதை


ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்,  மரியாதை
x
தினத்தந்தி 1 Nov 2019 4:11 AM GMT (Updated: 1 Nov 2019 4:11 AM GMT)

மெரினா கடற்கரயில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நாங்குநேரி, தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் , விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடு வெற்றி பெற்றனர்.அவர்கள் இருவரும்  இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்க உள்ள  ரெட்டியார்பட்டி நாராயணன் , முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரும்  மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து,  ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story