சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு


சென்னையில் வெங்காயம் விலை 3 மடங்காக உயர்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 5:40 AM GMT (Updated: 3 Nov 2019 9:27 AM GMT)

சென்னையில் தொடர் மழையால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.  இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது.  இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதனால், கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.  இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Next Story