சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் பலி


சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 3 Nov 2019 3:59 PM GMT (Updated: 3 Nov 2019 3:59 PM GMT)

தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி அறுத்ததில் 3 வயது சிருவன் உயிரிழந்தான்.

சென்னை,

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

அப்போது காற்றாடி விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் குழந்தை அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது. இரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 


மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த விசாரணையின் பேரில் மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தந்தையின் கண் எதிரே சிறுவனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story