திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்; 21-ந்தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்; 21-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 Nov 2019 11:23 PM GMT (Updated: 8 Nov 2019 11:23 PM GMT)

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே வாரியம் நடத்தும் குரூப்-டி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

திருச்செந்தூர், 

இந்தியன் ரெயில்வேயில் காலியாக உள்ள ‘டிராக்மேன், ஹெல்பர்’ பணியிடங்களுக்கான குரூப்-டி எழுத்துத்தேர்வை ரெயில்வே வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், குரூப்-டி தேர்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதிக்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 9.30 மணி முதல் 5.45 மணி வரை வகுப்புகள் நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் தங்கும் வசதி, உணவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 21-ந்தேதி நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.5 ஆயிரத்துக்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம், திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு, 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Next Story