அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


அயோத்தி வழக்கு தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 9 Nov 2019 2:47 AM GMT (Updated: 9 Nov 2019 3:37 AM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.  அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டு உள்ளனர்.

Next Story