திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும்.
சென்னை
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், வரும் 16ம் தேதி பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள் தோறும் விநியோகிப்பது என்றும், தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரசாரங்கள் மேற்கொள்வதென்றும் திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story