மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி


மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 2:20 PM GMT (Updated: 19 Nov 2019 2:20 PM GMT)

மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.  

தேவைப்பட்டால் இணைவோம் என்று நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளித்துள்ளது  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


Next Story