ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 3:10 PM GMT (Updated: 19 Nov 2019 3:15 PM GMT)

ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.

இவ்வாறு அவர்கள் இருவரும் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம் இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில் தந்தி டிவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்,

ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை. கருணாநிதி போன்ற ஜாம்பவான்களை கண்ட எங்கள் கட்சிக்கு, ரஜினி, கமல் போன்றோர் வெறும் எண்ணிக்கைத்தான்.  ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும், 2021ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிதான் என்றார்.

Next Story