மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2019 5:05 AM GMT (Updated: 20 Nov 2019 5:05 AM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததையடுத்து இந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது.

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர்இருப்பு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story