அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, காவல்துறை, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story