பேய் துரத்துவதுபோல் கனவுகண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்த வாலிபர்


பேய் துரத்துவதுபோல் கனவுகண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்த வாலிபர்
x
தினத்தந்தி 22 Nov 2019 8:36 AM GMT (Updated: 22 Nov 2019 8:36 AM GMT)

பேய் துரத்துவதுபோல் கனவுகண்டு ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்ததாக கூறும் இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கன்னியாகுமரி 

கன்னியாகுமரி அயனிவிளை நாகதேவி கோவில் அர்ச்சகர், கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து சென்று பார்த்துள்ளார். இரும்பு வலைக்கதவு போட்டு மூடப்பட்ட, குறுகிய விட்டம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் குறைந்த அளவில் இருந்த தண்ணீரில் நின்றவாறு இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு  கூக்குரலிட்டு உள்ளார்.

உடனடியாக அர்ச்சகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார். தீயணைப்புத்துறையினர் வந்து வலையைக் கட்டி இளைஞரை மேலே தூக்கினர். விசாரணையில் பேய் துரத்துவது போல் கனவு கண்டு உள்ளே விழுந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் கோவில் கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக அப்பகுதியில் நீண்டகாலமாகவே வதந்திகள் உலவி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இளைஞர் கூறும் பேய் கனவு உண்மைதானா? அல்லது வேறு சிலருடன் புதையல் தேடி வந்து கிணற்றுக்குள் சிக்கினாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story