அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் - மு.க.ஸ்டாலின்
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திக்கிற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
வேலூரில் திமுக-வை ஆளும் கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற கார்த்திக் எம்.எல்.ஏ-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என பதிவிட்டுள்ளார்.
வேலூரில் @VelloreDmk-வை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற @karthiknmla-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
— M.K.Stalin (@mkstalin) 22 November 2019
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை?
சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! pic.twitter.com/AA4yhSOgnl
Related Tags :
Next Story