சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் -சுப்பிரமணியன் சுவாமி
கட்சியை நல்ல முறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
சென்னை
ரஜினி தனது பட விளம்பரத்திற்காக மட்டுமே அரசியல் பேசுகிறார் என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ரஜினியின் அரசியல் வருகை குறித்து நிருபர்கள் கேட்டபோது, நடிகர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யப்போவதில்லை . சினிமா படங்கள் வெளிவர உள்ளதால் சிலர் விளம்பரத்திற்காக ஏதாவது பேசலாம். சினிமா வசனங்களை கேட்டு, கேட்டு அலுத்து போய்விட்டது என கூறினார்.
மேலும் அவர் கூறும் போது,
மராட்டிய அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்து கேட்டபோது அதுபற்றி தனக்கு தெரியாது. சசிகலா இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுக்குள் விடுதலையாகி வருவார். கட்சியை நல்ல முறையில் நடத்த சசிகலாவுக்கு திறமை உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறினார்.
Related Tags :
Next Story