கனமழையால் காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழையால் காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்களில் இன்று  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 28 Nov 2019 12:59 AM GMT (Updated: 28 Nov 2019 1:19 AM GMT)

கனமழை காரணமாக காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


Next Story