தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2019 7:15 AM GMT (Updated: 28 Nov 2019 10:42 AM GMT)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 30, 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும்.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story