உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் - ஸ்டாலின்


உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் - ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Nov 2019 7:26 AM GMT (Updated: 29 Nov 2019 7:26 AM GMT)

உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “  உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.   முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும், சந்திக்க தயார்.  நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. 

உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யவில்லை. புதிய மாவட்டங்களுக்கான மறு வரையறை இன்னமும் செய்யவில்லை.  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளது.  யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைக்கிறது” என்றார்.


Next Story