பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை


பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:04 AM GMT (Updated: 1 Dec 2019 10:04 AM GMT)

பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  நாளை  ஆலோசனை நடத்துகிறார்.

மழையையொட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மழை பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story