டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் இன்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை டிசம்பர் 6ந்தேதி வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடைபெறும் என கூறினார்.
Related Tags :
Next Story