கார்-லாரி பயங்கர மோதல்: சப்-இன்ஸ்பெக்டர், மனைவி- குழந்தை உள்பட 4 பேர் சாவு
சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், மனைவி, குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சத்தியமங்கலம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி தேவிபாலா (38). இவர்களுக்கு ஜனனி (1) என்ற பெண் குழந்தை இருந்தது. செல்வம் குடும்பத்துடன் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைத் தொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு சென்றார்.
இந்த கார் வடவள்ளி அருகே சென்றபோது எதிரே கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு பாரம் ஏற்றியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. உடனே டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேரும் பலியானார்கள்.
விபத்து நடந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் காரின் கதவை கடப்பாரையால் நெம்பி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தேவிபாலா, குழந்தை ஜனனி, முருகேசன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி தேவிபாலா (38). இவர்களுக்கு ஜனனி (1) என்ற பெண் குழந்தை இருந்தது. செல்வம் குடும்பத்துடன் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதைத் தொடர்ந்து வீடு மாற்ற பொருட்களை எடுத்து செல்வதற்காக நேற்று மாலை 5 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக்கொண்டு சென்றார்.
காரை செல்வம் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகே மனைவியும், குழந்தையும் உட்கார்ந்து இருந்தனர். முருகேசன் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தார்.
இந்த கார் வடவள்ளி அருகே சென்றபோது எதிரே கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு பாரம் ஏற்றியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. உடனே டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேரும் பலியானார்கள்.
விபத்து நடந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் காரின் கதவை கடப்பாரையால் நெம்பி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், தேவிபாலா, குழந்தை ஜனனி, முருகேசன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.
Related Tags :
Next Story