தமிழகத்தில் தொடர் மழை; 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் தொடர் மழையால் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்ய தொடங்கியது. வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியால், மழை தீவிரமடைந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் வடலூர் ஆகிய கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருத்தாசலத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொடர் மழையால் இங்குள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. இதேபோன்று தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story