உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையின்படி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு கமலுக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
எனவே ரஜினி-கமல் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா? என்று கேள்வி மீண்டும் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு தான் நஷ்டம். 2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார் என்றார்.
Related Tags :
Next Story