சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது சீடர் பாலியல் புகார்


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது சீடர் பாலியல் புகார்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:31 PM GMT (Updated: 14 Dec 2019 11:31 PM GMT)

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது அவரது ஆண் சீடர் பரபரப்பு பாலியல் புகார் கூறினார்.

சென்னை,

பண மோசடி, பாலியல் புகார், நில அபகரிப்பு என்று நித்யானந்தா தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். போலீசார் கைது நடவடிக்கைக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவரது ‘பாஸ்போர்ட்’ முடக்கப்பட்டு உள்ளது.

அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நித்யானந்தா மீது தஞ்சையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனுவை நேற்று அளித்தார்.

ஓரினச்சேர்க்கை, மாடல் அழகிகள்

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு சேர்ந்தேன். திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. என் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 350 இளைஞர்கள் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர்.

யோகா, தியானப்பயிற்சி என்ற போர்வையில் நித்யானந்தா மோசடியில் ஈடுபட்டு வருவதை நாளடைவில் தெரிந்துக்கொண்டேன். அவர் ஒரு செக்ஸ் வெறியர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். நித்யானந்தா என்னையும் ஓரினச்சேர்கைக்கு அழைத்தார். மாடல் அழகிகளை மயக்கி தன்னிடம் அனுப்புமாறு கூறினார்.

நடிகை ரஞ்சிதா கண் அசைவில்...

அவருடைய செயல்பாடு பிடிக்காமல் கடந்த 2015-ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்து தப்பினேன். எனக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள் அவரிடம் உள்ளது. அந்த நகையை திருப்பி கேட்டதால், எனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை பற்றி அவதூறாக தொடர்ந்து முகநூலில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

நான் ஓரினச்சேர்க்கையாளன், ஆசிரம பணத்தை கையாடல் செய்துவிட்டேன் என்று பொய் புகார்கள் கூறி வருகிறார்கள். நித்யானந்தா ஆசிரமம் நடிகை ரஞ்சிதாவின் மொத்த கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவருடைய கண் அசைவில் தான் நித்யானந்தா செயல்படுகிறார்.

நித்யானந்தா என்னுடன் பேசிய செக்ஸ் உரையாடல் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் கோர்ட்டில் அதனை சமர்ப்பிப்பேன். என் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story