திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா...? கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்


திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா...? கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2019 8:29 AM GMT (Updated: 21 Dec 2019 8:29 AM GMT)

கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் இதனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் கமல் கட்சி பங்கேற்குமா? என கேள்வி எழுந்து உள்ளது.

சென்னை,

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தி.மு.க சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் தி.மு.க கூட்டணியில் உள்ள 11 கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும் என்று நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் வெளிநாடு செல்லப்போவதாகவும் அதனால்  திமுக நடத்தும் பேரணியில் கமல் கட்சி பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உள்ளனர். திமுக நடத்தும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பேரணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இது  தொடர்பாக சற்று நேரத்தில் தங்கள் முடிவு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி விளக்கம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story