நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு -அமைச்சர் ஜெயக்குமார்


நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 21 Dec 2019 9:53 AM GMT (Updated: 21 Dec 2019 9:53 AM GMT)

நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை

தனியார் அமைப்பு சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா சென்னை மூலகொத்தளம் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டதோடு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி பரிசுகளும் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது குறித்த மு.க.ஸ்டாலினின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுக கட்சி கொடியிலேயே அண்ணாவை வைத்துள்ளதாகவும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது எனவும் கூறினார்.

Next Story