தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 3-ந் தேதி திறக்கப்படும்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 3-ந் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் தேதி பற்றி பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், அனைத்து பள்ளிகளும் வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு பதிலாக 3-ந் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற ஜனவரி 2-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று பள்ளிகள் திறப்பது மாணவ மாணவியருக்கு சிரமத்தினை ஏற்படுத்தும். இதனால் அதற்கு பதிலாக மறுநாளான ஜனவரி 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story