இலங்கையில் நெடுந்தீவு அருகே எல்லை கடந்து மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது


இலங்கையில் நெடுந்தீவு அருகே எல்லை கடந்து மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது
x
தினத்தந்தி 28 Dec 2019 3:30 PM GMT (Updated: 28 Dec 2019 3:30 PM GMT)

நெடுந்தீவு அருகே கடலில் எல்லை கடந்து மீன்பிடித்தனர் என கூறி 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை,

இந்தியாவின் ராமேஸ்வர கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெடுந்தீவு.  இலங்கை அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்த தீவு பகுதியில், இந்திய எல்லையை கடந்து சென்று மீன்பிடித்தனர் என கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை கடந்து சென்று மீன்பிடித்துள்ளனர் என கூறப்படுகிறது.  கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

Next Story