பிரதமர், உள்துறை மந்திரிக்கு எதிராக சர்ச்சை பேச்சு; நெல்லை கண்ணன் மீது வழக்கு


பிரதமர், உள்துறை மந்திரிக்கு எதிராக சர்ச்சை பேச்சு; நெல்லை கண்ணன் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:04 AM GMT (Updated: 31 Dec 2019 8:04 AM GMT)

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.  இதில், மேடை பேச்சாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.  இதனால் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசினார் என கூறி, பா.ஜ.க. தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த போலீசார், கலவரம் ஏற்படும் வகையில் பேசுதல், மக்களை கிளர்ந்தெழ செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story