வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும் - மு.க. ஸ்டாலின்


வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும் - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Jan 2020 3:23 PM GMT (Updated: 5 Jan 2020 3:23 PM GMT)

வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்பதாலேயே திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் சிசிடிவி ஆதாரங்களை பார்த்தால் நடந்த தவறுகள் தெரிய வரும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 85 சதவீத இடங்களில் திமுக தான் வெற்றி பெற்றது என அண்ணாவின் மீது ஆணையாக கூறுகிறேன்.

திமுகவின் வெற்றி அதிகரித்தவுடன் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடக்க விடாமல் செய்தது ஆளுங்கட்சி. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை, உள்ளாட்சியிலும் பெற்றிருக்கிறோம் அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சியில் அமரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story