நான் திமுகக்காரன்... ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!


நான் திமுகக்காரன்... ரஜினியின் பேச்சை  சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!
x
தினத்தந்தி 15 Jan 2020 3:07 AM GMT (Updated: 15 Jan 2020 3:07 AM GMT)

முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்.ரஜினியை பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்து உள்ளார்.

சென்னை

துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழா சென்னையில்  நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமாகா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு சேவை செய்வது என்பது தந்தைக்குரிய பதவி. அந்த மாபெரும் சேவையை சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். இந்த துக்ளக் இதழை, சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவத்சலம்.

முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. துக்ளக் சோவிற்கு பிறகு, இந்த துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.

சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்க கூடாது. கவலைகளை நிரந்தரமாக்கிகொள்வதும், தற்காலிகமாக்கி கொள்வதும் நமது கையில்தான் உள்ளது. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ரஜினிகாந்தின் இந்த் பேச்சை சுட்டிகாட்டி உதயநிதி ஸ்டாலின்  தனது ட்விட்டரில் 

முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என கூறி உள்ளார்.


Next Story