திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்
x
தினத்தந்தி 15 Jan 2020 8:27 AM GMT (Updated: 15 Jan 2020 8:27 AM GMT)

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொதுமக்களுடன் பொங்கல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கு பின் துரைமுருகன்  கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி போனாலும் போகட்டும், அதனால் தங்களுக்கு நஷ்டமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது  அதனால் அது ஓட்டு வங்கியை பாதிக்காது என துரைமுருகன் பதிலளித்தார்.

கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கூறியதாகவும், ஆனால் தாம் பதிலையே கூறிவிட்டதாகவும் துரைமுருகன் கூறினார்.

Next Story