பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து


பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்க வேண்டும் - அமைச்சர்  ஜெயக்குமார் கருத்து
x
தினத்தந்தி 20 Jan 2020 10:38 AM GMT (Updated: 20 Jan 2020 10:38 AM GMT)

பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “துக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் இடம்பெறும், “பத்தவச்சிட்டியே பரட்ட” என்ற வசனத்தைப் போல, தற்போது ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்து பற்றி எரிவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், பழைய கருத்துக்களை பேசி பிரச்சினையை எழுப்பக்கூடாது என்றும், எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக பேசவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story