உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து  தெரிவித்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:36 AM GMT (Updated: 20 Jan 2020 11:36 AM GMT)

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில், 9 இடங்களை திமுக கைப்பற்றியது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் பதவியை திமுக எளிதாக கைப்பற்ற வாய்ப்பு இருந்தும், அதிமுகவிடம் வெற்றியை பறிகொடுத்தது. 

இதனால், அதிருப்தியில் இருந்த திமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அவர்களை திருச்சியில் சந்தித்தார். வெற்றிப் பெற்ற பிரதிநிதிகளுக்கு தனித்தனியே வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு குறித்து, திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் உள்ளதாக கூறப்படும் நிலையில், புதுநிலை வயல் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற காங்கிரசை சேர்ந்த ராஜேஸ்வரி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Next Story