‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் -தமிழக அரசு அரசாணை வெளியீடு


‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் -தமிழக அரசு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 23 Jan 2020 6:09 PM GMT (Updated: 23 Jan 2020 6:17 PM GMT)

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. 

நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். 2020-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.  இந்த திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. 

அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Next Story