குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..?


குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..?
x
தினத்தந்தி 28 Jan 2020 1:57 PM GMT (Updated: 28 Jan 2020 1:57 PM GMT)

குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தை உலுக்கிய குரூப்-4 முறைகேடு விவகாரத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேரையும் கைது செய்யும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். அவர்கள் தரும் தகவலின் அடிப்படையில், கைதாகும் தேர்வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்படி, கைது எண்ணிக்கை அதிகரித்தால், தகுதி நீக்கம் செய்ய வேண்டிய தேர்வர்களின் எண்ணிக்கையும்  உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இதனால், ஒட்டுமொத்தமாக குரூப்-4 தேர்வை ரத்து செய்வது குறித்து, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. 

Next Story