கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் -தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு


கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் -தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Jan 2020 12:29 PM GMT (Updated: 29 Jan 2020 12:29 PM GMT)

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் தெரிவித்தார்.

சென்னை

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கடந்த 27ந்தேதி பாஜக பிரமுகர் விஜய ரகு  கொலை செய்யப்பட்டார். விஜய் ரகு வீட்டுக்கு சென்ற தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் முருகன் அவரது குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது விஜய ரகுவின் தாயார், மனைவி ஆகியோர் கதறி அழுதவாறு முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், விஜய் ரகு கொலையின் மூலம் கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவி இருப்பது தெரியவந்ததாக கூறினார்.

Next Story