சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது
சென்னை அம்பத்தூரில் ஆபாச படம் பார்த்த இளம் பட்டதாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சிறார்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்கும் விதமாக தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் ஆபாச படம் பார்த்த இளம் பட்டதாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறுவர் சிறுமிகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை ஹரிஸ் என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்போனில் பார்த்துள்ளார்.
செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி ஆகியவற்றின் மூலம் ஹரிஸை கண்டுபிடித்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Related Tags :
Next Story