சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்
சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-
சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மக்கள் பீதி அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story