அண்ணாவின் 51-வது நினைவு தினம்; முதலமைச்சர் பழனிசாமி மரியாதை


அண்ணாவின் 51-வது நினைவு தினம்; முதலமைச்சர் பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 3 Feb 2020 5:45 AM GMT (Updated: 3 Feb 2020 5:45 AM GMT)

அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 51- வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story