20-வது ஆண்டு கொடிநாள் விழா: 118 அடி உயர கம்பத்தில் விஜயகாந்த் கொடி ஏற்றுகிறார்
20-வது ஆண்டு கொடிநாள் விழாவை முன்னிட்டு தே.மு.தி.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை,
தே.மு.தி.க.வின் 20-ம் ஆண்டு கொடி நாள் விழாவையொட்டி 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கோயம்பேடு, தலைமை கழகத்தில் நிறுவனத்தலைவர் விஜயகாந்தால் 118 அடி உயர கொடி ஏற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றவுள்ளது. இந்த விழாவில் மாவட்டம், பகுதி, வட்டம், மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும், பெருந்திரளாக கலந்துகொண்டு கொடியேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடி நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற நம் கட்சியின் கொள்கைப்படி நம்மால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடி நாள் விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story