காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு


காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 14 Feb 2020 6:15 AM GMT (Updated: 14 Feb 2020 6:15 AM GMT)

காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு 

* தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

* இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த  பணி மேற்கொள்ல ரூ  700 கோடி ஒதுக்கீடு

* பக்கிம்காம் கால்வாய், கூவம் , அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ. 5439.76  கோடி ஒதுக்கீடு

* குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்!

Next Story