சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்


சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு ;5 -வது நாளாக தொடரும் போராட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2020 2:39 AM GMT (Updated: 18 Feb 2020 7:31 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது .

சென்னை,

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

 சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. 

மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசைக் கண்டித்து மட்டுமே போராட்டம் நடைபெறுவதாக, போராட்டக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story