தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது; தமிழக காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அவர், தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் (சி.ஏ.ஏ.) யாருக்கும் பாதிப்பு இல்லை என யார் சொன்னாலும் தவறுதான். சி.ஏ.ஏ.வை ஆதரிக்க வேண்டுமெனில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டிருக்கலாம்
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம் என தமிழக நலன்களை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். ரெயில்வே, தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story