சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறது.
சென்னை
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்து உள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் கிண்டி கிங்ஸ் மருத்துமனைக்கு அனுப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story