சென்னையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்: மார்ச் 1-ந்தேதி நடக்கிறது


சென்னையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்: மார்ச் 1-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 24 Feb 2020 9:00 PM GMT (Updated: 24 Feb 2020 6:59 PM GMT)

சென்னையில் மார்ச் 1-ந்தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, 

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் மார்ச் 1-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என்.பேலஸ் திருமண அரங்கத்தில் நடக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பா.ம.க.வுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்தத் தேர்தலில் பா.ம.க. வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story