வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story