நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 7:11 AM GMT (Updated: 15 March 2020 7:11 AM GMT)

நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-நெல்லை(வண்டி எண்: 82601) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 3 மற்றும் 24-ந்தேதி, மே மாதம் 8, 22-ந்தேதிகளில் மாலை 6.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நெல்லை-எழும்பூர்(82602) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும்.

* நாகர்கோவில்-தாம்பரம்(82624) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் இரவு 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தாம்பரம்-நாகர்கோவில்(06035) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10, 17-ந்தேதி, மே மாதம் 1, 15, 29-ந் தேதிகளில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story