சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்: கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது - வியாபாரிகள் தகவல்


சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்: கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது - வியாபாரிகள் தகவல்
x
தினத்தந்தி 18 March 2020 12:57 AM GMT (Updated: 18 March 2020 12:57 AM GMT)

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது என்று வியாபாரிகள் கூறினர்.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட் மூடல் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மையில்லை. வழக்கம்போலவே மார்க்கெட் செயல்படுகிறது. எனவே வியாபாரிகள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்களும் அச்சமடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story