கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2020 2:32 AM GMT (Updated: 20 March 2020 7:22 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கீழ்க்கண்ட ரெயில் கள் ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த மாதம்(ஏப்ரல்) 6, 13, 20-ந்தேதி இயக்கப்பட இருந்த சென்னை எழும்பூர்-தூத்துக்குடி(வண்டி எண்: 06003) சிறப்பு கட்டண ரெயில், ஏப்ரல் 7, 14-ந் தேதி தூத்துக்குடி-எழும்பூர்(82604) சுவிதா சிறப்பு ரெயில் மற்றும் 21-ந்தேதி இயக்கப்பட இருந்த தூத்துக்குடி-எழும்பூர்(06004) சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தாம்பரம்-நாகர்கோவில்(06005) இடையே 8, 15-ந்தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(06006) 9, 16-ந்தேதி, நெல்லை-தாம்பரம்(06036) 2, 9, 16-ந்தேதி, தாம்பரம்- நெல்லை(82615) 3-ந்தேதி மற்றும் தாம்பரம்- நெல்லை (06035) இடையே 10, 17-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், நாகர்கோவில்-தாம்பரம்(06064) 6, 19-ந் தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(82624) 12-ந்தேதி, தாம்பரம்-நாகர்கோவில்(06063) 3, 10-ந்தேதி, நெல்லை-எழும்பூர்(82602) ஏப்ரல் 5, 12-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இது தவிர பல்வேறு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story