நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு


நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 4:26 AM GMT (Updated: 23 March 2020 4:26 AM GMT)

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

சென்னை

கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில்,  நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கப்போவதாக அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.  அதேபோல், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

Next Story