சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு - ப.தனபால் அறிவிப்பு


சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு - ப.தனபால் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 10:15 PM GMT (Updated: 23 March 2020 9:48 PM GMT)

சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடையும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அறையில் நடைபெற்றது. பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் ப.தனபால் சட்டசபையில் கூறியதாவது:-

இன்றைக்கு கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை எடுத்துக் கொள்வதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்த மானியக் கோரிக்கைகளை 24-ந்தேதி அன்று (இன்று), விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் அரசின் சட்ட முன்வடிவு ஆய்வு செய்தலும், நிறைவேற்றலும், ஏனைய அரசின் அலுவல்கள் ஏதேனும் இருப்பின் அதுவும் எடுத்துக் கொள்ளப்படும்.

வினாக்கள்-விடைகள் நேரம் இல்லை என்றும் அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து ஒரு தீர்மானத்தை பேரவை முன்னவரான துணை முதல்-அமைச்சர் கொண்டு வருவார். இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார்.

அதன்பேரில், அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 235 விதியின் கீழ் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில், சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது.

Next Story